For Daily Alerts
Just In
யாழ். சண்டையில் 73 புலிகள் உள்பட 92 பேர் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த சண்டையில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் 73 பேர் விடுதலைப்புலிகள், 17 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் 2 பேர் பொதுமக்கள். இவ்விபத்தில் 54 வீரர்கள்காயமடைந்தனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே இதுகுறித்து கூறுகையில், திரிகோணமலையில், ஞாயிற்றுக்கிழமை ராணுவ வீரர்களுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையே மூன்று இடங்களில் சண்டை மூண்டது.
கடந்த வாரம் முழுவதும் நடந்த சண்டையில் இதுவரை 142 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 900 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.செப்டம்பர் 3 ம் தேதி யாழ்ப்பாணத்தில் புலிகள் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 125 ராணுவ வீரர்களும், 375புலிகளும் இறந்தனர் எனறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Monday, September 11, 2000, 5:30 [IST]