கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் ஸ்டிரைக் ..டெலிபோன் ஊழியர்கள் எச்சரிக்கை
டெல்லி
செப்டம்பர் 22 ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்காவிட்டால், மீண்டும்வேலைநிறுத்தத்தில் இறங்குவோம் தொலைத் தொடர்பு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் குப்தா கூறுகையில், மத்திய அரசு எங்களது கோரிக்கைகளை செப்டம்பர் 22 ம்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
நாடு முழுவதும் கடந்த புதன்கிழமை தொடங்கி 3 நாட்கள் தொலைத்தொடர்பு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதில், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் (என்.ஈ.டி.ஈ), பாரதிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் (பி.ஈ.டி.ஈ), தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம்(எப்.என்.டி.யூ) ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.
மத்திய தொலைத்தொடர்புத் துறையிலிருந்து பிரித்து பாரத் சன்சார் நிஹாம் லிமிடெட் என்று தனி நிறுவனமாக மாற்றி, வரும் அக்டோபர் 1 ம் தேதி முதல்அதை அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்தும், ஓய்வூதிய சலுகை, பணிப்பாதுகாப்பு போன்ற சலுகைகளை அமல்படுத்தக் கோரியும்தொலைத் தொடர்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத் தலைவர்களுக்கும், தொலைத்தொடர்பு அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் முடிவில் தொலைத்தொடர்பு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாஸ்வான் ஒத்துக்கொண்டார். இதையடுத்து,போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications