For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக வங்கி - சர்வதேச நிதிய வளர்ச்சி கமிட்டித் தலைவராக யஷ்வந்த் சின்ஹாநியமனம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவற்றின் கொள்கைமுடிவுகளை மேற்கொள்ளும் இணை அமைப்பான வளர்ச்சி கமிட்டித் தலைவராகஇந்தியாவின் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

செக் குடியரசின் தலைநகர் பராக்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ளகமிட்டியின் அடுத்த கூட்டத்தில் தலைவர் பொறுப்பை சின்ஹா ஏற்றுக் கொள்கிறார்.அடுத்த 2 ஆண்டுகளுக்கு கமிட்டியின் தலைவராக சின்ஹா இருப்பார்.

இப்போது வளர்ச்சி கமிட்டின் தலைவராக தாய்லாந்து நாட்டின் நிதி அமைச்சர் தாரின்நிம்மனஹேமிந்தா உள்ளார்.

1974-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பில் 24 பேர் உறுப்பினர்களாகஉள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தில்நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளின் நிதி அமைச்சர்கள் ஆவர்.

குறிப்பாக வளரும் நாடுகளின் நிதி மற்றும் வேறு பல பிரச்சினைகளை இக் கமிட்டிஆராய்ந்து அதற்கேற்ப கொள்கை முடிவுகளை மேற்கொண்டு உதவி நடவடிக்கைகளைஎடுக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X