For Daily Alerts
Just In
ஜெ.வுடன் லோக்சபா துணை சபாநாயகர் சந்திப்பு
சென்னை:
லோக்சபா துணை சபாநாயகர் பி.எம். சயீது சென்னையில் புதன்கிழமை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
மக்களவை துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.எம்.சயீது தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. அதற்கு நன்றிதெரிவிக்கும் வகையில் ஜெயலலிதாவை அவர் சந்தித்ததாக அ.தி.மு.க செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த சந்திப்பு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் புதன்கிழமை காலை நடைபெற்றது. அரை மணி நேரம் இருவரும் விவாதித்தனர்.
Comments
Story first published: Wednesday, September 13, 2000, 5:30 [IST]