"அலிகளுக்கும் தேவை அடையாள அட்டை
சென்னை:
அலிகளுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றுஅலிகளின் மறுவாழ்வுக்காக போராடி வரும் இக்னைட் என்ற அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
இந் நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் புதன்கிழமை சென்னையில்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் 82 சதவீத அலிகள் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பலவிதபாலியல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களைக் கவனிப்பதற்கு யாரும்முன்வருவதில்லை.
எங்கள் அமைப்பின் சார்பில் அலிகள் மறுவாழ்வுக்கென பல திட்டங்களைஅமல்படுத்தவுள்ளோம். முதல் கட்டமாக, பாலியல் நோய்களால் பாதிக்கப்படும்அலிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டவுள்ளோம். இதற்காக 16-ம் தேதி சென்னையில்இசைக் கச்சேரி நடத்தவுள்ளோம்.
இதேபோல, சென்னை புரசைவாக்கத்தில் அலிகளே நடத்தும் ஹோட்டல்துவக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் இருந்த ஒரு அலி கூறுகையில், எங்களை யாரும் சாதாரணமாகபார்ப்பதில்லை. அசாதாரணமான நோக்கில்தான் பார்க்கின்றனர், சீண்டுகின்றனர். இதுஏன் என்று தெரியவில்லை. நாங்களும் பிறரைப் போல மனிதர்கள்தான்.
எங்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. விண்ணப்பித்தால் கூட அது கிடைப்பதில்லை.சமூகத்தில் எங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடையாது.
முன்பு டி.என்.சேஷன் தேர்தல் கமினஷனராக இருந்தபோது, எங்களுக்கும்வாக்குரிமை வழங்கப்பட வேண்டும். ஆண்களுக்கு எம் என்றும், பெண்களுக்கு எப்என்றும் போடுவது போல, எங்களுக்கு யு என்று போட்டுத் தர வேண்டும் என்றுஆணையே பிறப்பித்தார். ஆனால் இதுவரை அது கண்டு கொள்ளப்படவில்லைஎன்றார் வருத்தத்துடன்.