For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனி மின்னணுப் பொருட்கள் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜெர்மனியில் நடைபெற உள்ள வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களின் கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 20 கம்பெனிகள் கலந்து கொள்ள உள்ளன.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தொடங்க உள்ள ஐ.எஃப்.ஏ.-2001 என்ற இந்த கண்காட்சி 9 நாட்கள் நடைபெறும். இது குறித்துகண்காட்சி இயக்குநர் கிளாஸ் ஜெ. ட்ரீயர் கூறியதாவது:

பெர்லினில் 9 நாட்கள் நடைபெற உள்ள இக் கண்காட்சியில் இந்தியாவில் வீட்டு உபயோக மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சுமார்20 கம்பெனிகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 15 இந்திய கம்பெனிகள் கலந்து கொண்டன.

இது தவிர உலகம் முழுவதும் இருந்து சுமார் 36 நாடுகளைச் சேர்ந்த 950 கம்பெனிகளும் இக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 36 நாடுகளைச் சேர்ந்த 885 கம்பெனிகள் கலந்து கொண்டன.

வீட்டு உபயோக மின்னணுப் பொருட்கள் தவிர தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறைப் பொருட்களும் இக் கண்காட்சியில் இடம்பெறும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X