For Daily Alerts
Just In
வெள்ளத்தில் மூழ்கி வனக்காவலர் சாவு
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, முதுமலை விலங்குகள் சரணாலய வனக்காவலர் புதன்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவரும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக பொதுமக்கள் சிலர் அங்கு சென்று மீட்க முயற்சித்தனர்.
அவர்களில் போலீஸ் கான்ஸ்டபி மட்டும் மீட்கப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட வனக்காவலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை தேடும் முயற்சி நடக்கிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, September 14, 2000, 5:30 [IST]