காங்கிரசை விட்டு ஓடும் தொண்டர்கள்
டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெரும் அளவில் அந்தக் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். கடந்த 3ஆண்டுகளில் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.
இதை காங்கிரஸ் கட்சியே வெட்கத்தைவிட்டு முதல் முறையாக வெளியே கூறியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் 4.5 கோடியாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 2.2 கோடியாகசுருங்கிவிட்டது. கட்சியின் தீவிர உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தில் இருந்து 8.8 லட்சமாக சரிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தத் தேர்தலை நடத்தி வரும்கட்சியின் பொறுப்பாளர் ராம் நிவாஸ் மிர்தா கூறியதாவது:
கட்சியில் உறுப்பினர்கள் குறைந்து போனதற்குக் காரணம் என்ன தெரியுமா? வருடாந்திர உறுப்பினர் கட்டணம் 1ரூபாயில் இருந்து 3 ரூபாயாக உயர்த்தப்பட்டது தான்.
உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியாணா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசத்தில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கைபெருமளவில் சரிந்துவிட்டது. ஆனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், நாகாலாந்து, பஞ்சாப், பாண்டிச்சேரியில்உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.