For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்துணவு சாப்பிட்ட 340 மாணவர்கள் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோயில்:

அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்ட 340 மாணவ,மாணவியர் வாந்தி எடுத்த மயக்கமடைந்தனர்.

இது பற்றி கூறப்படுவதாவது:

நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 610மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல்சத்துணவு வழங்கப்பட்டது.

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பல மாணவ, மாணவியர் வாந்தி எடுத்துமயக்கமடைந்தனர். உடனடியாக அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தங்களதுகுழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஓரளவுகுணமடைந்த மாணவி, மாணவியர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

ஆனால், சிலருக்கு தொடர்ந்து வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதை அடுத்து அவர்கள்மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 68 பேர் இன்னும்மருத்துவமனையில் உள்ளனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ரமேஷ்சந்த்மீனா பார்த்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்குஉத்தரவிட்டார்.

இச் சம்பவம் குறித்து வடசேரி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவுஅமைப்பாளர் ஆயிஷா பீவி மற்றும் வசந்தா, ஷீலா, வல்சம்மாள் ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X