For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாவகச்சேரியைக் கைப்பற்றியது இலங்கை ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

யாழ்ப்பாண தீபகற்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு அடுத்து பெரிய நகரான சாவகச்சேரியைவிடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

இது குறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் கருணரத்னேகூறியதாவது:

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள சாகவகச்சேரியில் இலங்கை ராணுவத்துக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. 3 மணி நேரசண்டைக்குப் பிறகு புலிகளிடமிருந்து சாவகச்சேரியை இலங்கை ராணுவம்கைப்பற்றியது.

இச் சண்டையில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். ராணவம் தரப்பில் ஒருஅதிகாரி உள்பட 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர்.

புலிகளுக்கு எதிரான நடந்த இச் சண்டையில் இலங்கை ராணுவத்தினருக்கு உதவியாகவிமானப் படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. புலிகளின் பாதுகாப்பு அரண்கள்மீது விமானங்கள் சரமாரி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின.

கொழும்புத்துறையிலிருந்து படிப்படியாக முன்னேறி சாவகச்சேரியை இலங்கைராணுவம் கைப்பற்றியது. இலங்கையின் வடபகுதியில் புலிகளுக்கு எதிராக தொடர்ந்துதாக்குதல் நடத்தப்படும் என்றார் கருணரத்னே.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X