For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் 500 ஏ.டி.எம். மையங்கள்: பாரத ஸ்டேட் வங்கி திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

விஜயவாடா:

நாடு முழுவதும் மேலும் 500 ஏ.டி.எம். சேவை மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாரதஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் (வளர்ச்சி மற்றும் தனிநபர் வங்கிச் சேவை) திலீப் தாஸ்குப்தாதெரிவித்தார்.

விஜயவாடாவில் புதிய ஏ.டி.எம். சேவை மையம் மற்றும் சிறப்பு தனிநகர் வங்கிச் சேவை வசதியைதிங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பாரத ஸ்டேட் வங்கிக்கு கடந்த ஆண்டு ரூ. 2150 கோடி லாபம் கிடைத்தது. இதில் 3-ல் ஒரு பகுதிலாபத்தை வங்கியை நவீனப்படுத்த ஒதுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் 2100 கிளைகள்கம்ப்யூட்டமயமாக்கப்பட்டுள்ளன. நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த 2100 கிளைகளும்இணைக்கப்படும்.

இது தவிர மேலும் 500 இடங்களில் ஏ.டி.எம். சேவை மையங்கள் தொடங்கப்படும். அடுத்த 12 முதல்18 மாதங்களில் இப் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்.

வங்கிச் சேவையை மேலும் நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் சர்வதேச ஆலோசனை அமைப்புடன்பாரத ஸ்டேட் வங்கி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றார் திலீப் தாஸ்குப்தா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X