டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வீடன் வீரருடன் மோதுகிறார் லியாண்டர் பயஸ்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சவால் புதன்கிழமைதொடங்குகிறது.
ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், தனது முதல் சுற்றில் ஸ்வீடன் வீரர்மைக்கேல் டில்ஸ்ட்ராமுடன் மோதுகிறார்.
அட்லாண்டாவில் கடைசியாக நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம்வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அந்த பதக்கத்தைப் பெற்றுத் தந்தது லியாண்டர் பயஸ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுதந்திரத்துக்குப் பிறகு தனி நபர் ஒருவர் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம்பெற்றுத் தந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்த முறையும் டென்னிஸ் போட்டியில் அவர் பதக்கம் வெல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், முதல் சுற்றில் அவர் வெற்றிபெற சற்று கடுமையாகப்போராடவேண்டியிருக்கும்.
உலக டென்னிஸ் அரங்கில் டில்ஸ்ட்ராம் 52-வது இடத்திலும், பயஸ் 113-வது இடத்திலும்உள்ளனர். அதே நேரத்தில் அட்லாண்டா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றபோது பயஸ் 125-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயஸும், டில்ஸ்ட்ராமும் இரண்டாவது முறையாக இப்போது மோத உள்ளனர். 1998-ம்ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் நடந்த முதல் சந்திப்பில் பயஸை டில்ஸ்ட்ராம்தோற்கடித்துள்ளார்.
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் லியாண்டர்பயஸ் மட்டுமே கலந்து கொள்கிறார். அவர் தோற்றால் டென்னிஸில் ஒற்றையர் பதக்கக்கனவு தகர்ந்துவிடும்.
இருப்பினும், டென்னிஸில் இரட்டையர் போட்டியில் அவரும் மகேஷ் பூபதியும் ஜோடிசேர்ந்து விளையாடுகின்றனர்.
இரட்டையர் போட்டியும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. காலையில்ஒற்றையர் போட்டியில் விளையாடிவிட்டு இரட்டையர் போட்டியில் விளையாட வேண்டியகட்டாயத்தில் லியாண்டர் பயஸ் உள்ளார்.
இந்திய ஜோடி தனது முதல் சுற்றில் ருமேனியா ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.
யு.என்.ஐ.