For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்முறையாளர்கள் கைதுக்கு வருத்தப்படுகிறார் அழகிரி

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

அமைதி காத்திடுங்கள் என்று வன்முறையில் ஈடுபட்டு வரும் தனது ஆதரவாளர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன்மு.க.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அழகிரிக்கு எதிராக திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து மதுரை மாவட்டத்தில் அவரது ஆதரவு திமுகவினர்வன்றைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 3 பஸ்களை எரித்துள்ளனர்.

அம் மாவட்டம் முழுவதும் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சூழ்நிலையில் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை குறித்து திமுக தொண்டர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம் என்று பணிவோடுகேட்டுக் கொள்கிறேன்.

என் மீது அன்பு கொண்ட திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகள் ஏற்படும் செயல்களிலும் ஈடுபடாமல்அமைதி காத்திட வேண்டும்.

என் மீது அன்பு கொண்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது வருந்தத்தக்கதாகும் என்று அழகிரி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X