போதை மருந்து: ஏமாற்றினார்...பிடிபட்டார்...பறிபோனது வெள்ளிப் பதக்கம்
சிட்னி:
போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்த வெள்ளிப் பதக்கம் வென்ற பல்கேரியவீரரிடமிருந்து அப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.
ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்றார் பல்கேரிய நாட்டின் இவான்இவாநோவ். இப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
போட்டிக்கு முன்பு அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று அவர்கூறியிருந்தார். இதையடுத்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார்.
ஆனால், போட்டிக்குப் பிறகு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் போதை மருந்து பயன்படுத்தியதுபுதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்குகொள்ள அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார். மேலும் தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டார். அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. அவரது சாதனைரத்து செய்யப்பட்டது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இயக்குநர் ஜெனரல் பிரான்கோயிஸ் கார்ராடுதெரிவித்தார்.
இதையடுத்து 56 கிலோ எடைப் பிரிவில் 3-ம் இடம் பெற்ற சீனா வீராங்கனை உ வெங்சியாங்குக்கு வெள்ளிப்பதக்கமும், 4-ம் இடம் பெற்ற சீனா வீராங்கனை ஸாங ஸியாங்ஸியாங்குக்கு வெண்கலப் பதக்கமும்வழங்கப்பட்டன.