பட்டினி: உலகம் முழுவதும் தினசரி 60,000 சிறுவர்கள் சாவு
மியூனிச்:
பட்டினியால் உலகம் முழுவதும் தினசரி 60 ஆயிரம் சிறுவர்கள் இறப்பதாககணக்கெடுப்பு கூறுகிறது.
உலகம் முழுவதும் சிறுவர்கள் தினம் புதன்கிழமை (செப்டம்பர் 20)கடைப்பிடிக்கப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையில் சர்வதேச மனித உரிமைகள்அமைப்பு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் உலகம் முழுவதும் பட்டினியால் தினசரி 60 ஆயிரம் சிறுவர்கள் இறக்கின்றனர்.இது தவிர உலகம் முழுவதும் மொத்தம் 15 கோடி பேர் பட்டினியால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
உலகில் 3 சிறுவர்களில் ஒரு சிறுவன் மட்டுமே பள்ளிக்கு ஒழுங்காகச் செல்கிறான்.லட்சக்கணக்கான சிறுவர்கள் தெருக்களில் ஏழ்மை நிலையில் வசிக்கின்றனர்.
உலகம் முழுவதும் 25 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகப்பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், விபசாரம் போன்றவற்றிலும்லட்சக்கணக்கான சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.