மீண்டும் வருகிறது தபால்துறை வேலைநிறுத்தம்
சென்னை:
நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தபால்-தந்தித்துறை ஊழியர்கள்அறிவித்துள்ளனர்.
இது குறித்து அனைத்திந்திய அஞ்சல் துறை ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோக் பட்டாச்சார்யா சென்னையில்அளித்த பேட்டி:
கடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுகூட்டத்தில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனம், அகில இந்திய தபால் ஊழியர் சம்மேளனம், பாரதிய தபால் ஊழியர் சம்மேளனம்ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சம்பள உயர்வு, ஆட்குறைப்பு மற்றும் அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகியவை உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் ஊழியர் ஆட்குறைப்பு செய்தல், காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது, மூன்று நான்கு தபால் நிலையங்களை மூடிவிட்டு, ஒரே தபால் நிலையமாக இயங்கச் செய்வது போன்ற அரசு நடவடிக்கைகள் ஊழியர்களின் வேலை பாதுகாப்புக்குஉகந்ததாக இல்லை.
மக்களுக்கு தபால் துறை அளிக்கும் சேவையும் இதனால் பாதிக்கப்படுகிறது என்றார் அவர்.