For Daily Alerts
Just In
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.5 லட்சம் நகை கொள்ளை
கோவை:
கோவையில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது.
கோவை அருகே உள்ள துடியலூரைச் சேர்ந்தவர் நரேந்திர மகேஷ் (30). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில், தொப்பம்பட்டி பிரிவு என்ற இடத்தில்குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த செப்.16ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
பின்னர் செப்டம்பர் 19ம் தேதி வீட்டுக்கு வந்து திறந்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 53 பவுன் நகை கொள்ளை போயிருந்ததுதெரிய வந்தது.
இதன் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய் ஆகும். இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, September 20, 2000, 5:30 [IST]