குத்துச் சண்டை: தோற்றார் இந்திய வீரர் ஜதீந்தர் சிங்
சிட்னி:
குத்துச் சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில்இந்தியாவின் ஜதீந்தர் சிங் தனது இரண்டாவது சுற்றில் தோற்று வெளியேறினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அவர் ருமேனியாவின் அட்ரியன்டயகோனுவை எதிர்த்து மோதினார். ஆனால், 3-க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில்தோல்வியுற்றார்.
கனடா வீரருக்கு எதிராக நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இரண்டாவது ரவுன்டிலேயேவெற்றி பெற்ற ஜதீந்தர் சிங், ருமேனிய வீரரின் சவாலைச் சமாளிக்க முடியவில்லை.
இருப்பினும் 4 ரவுன்டுகள் வரை அவர் சமாளித்து நின்று மோதிப் பார்த்தார். ஆனால்,ருமேனிய வீரரின் குத்துக்களை அவரால் தடுக்க முடியவில்லை. முடிவில் புள்ளிகள்கணக்கில் அவர் தோல்வியுற்றார்.
இத் தோல்வியின் மூலம் குத்துச் சண்டையில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவில்சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் கலந்து கொண்ட 3 பேரில் இப்போது ஒரேஒரு வீரர் மட்டுமே களத்தில் உள்ளார்.
81 கிலோ எடைப் பிரிவில் குர்சரண் சிங் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.ஏற்கெனவே 52 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட டிங்கோ சிங் தனது முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறிவிட்டார்.