பளுதூக்குதல்: இந்தோனேஷியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தோனேஷியாவுக்கு எதிர்பாராதபதக்கங்கள் கிடைத்தன.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரரும், வீராங்கனையும் போதை மருந்துப்பரிசோதனையில் பிடிபட்டனர். இதையடுத்து அவர்கள் வென்ற பதக்கங்கள்பறிக்கப்பட்டன.
இவ்வாறு பறிக்கப்பட்ட பதக்கங்கள் அடுத்த இடங்களைப் பெற்றவர்களுக்குவழங்கப்பட்டது. அந்த வகையில் அடித்த அதிர்ஷ்டத்தால் இந்தோனேஷியாவுக்குபெண்கள் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பல்கேரிய வீராங்கனை இஸபெல்லாடிராஜினேவா தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுஇரண்டாம் இடம் பிடித்த அமெரிக்க வீராங்கனைக்கு வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்த இந்தோனேஷிய வீராங்கனைரேமா லிசா ரம்பேவாஸுக்கு வெள்ளியும், 4-ம் இடம் பெற்ற மற்றொரு இந்தோனேஷியவீராங்கனை ஸ்ரீ இந்திரியானி வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது.