For Daily Alerts
Just In
குதிரையேற்றத்தில் இந்திய வீரருக்குக் கடைசி இடம்
சிட்னி:
குதிரையேற்றத்தில் ஆண்களுக்கான தனிநபர் மூன்று நாள் போட்டியில் இந்தியாவின்இம்தியாஸ் அனீஸ் கடைசி இடம் பிடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த இப் போட்டியின் இறுதியில் அவர் மொத்தம் 236.60பெனால்டி புள்ளிகள் எடுத்திருந்தார். இதனால் இப் போட்டியில் அவர் 23-வது இடம்பிடித்தார். இப்போட்டியில் கலந்து கொண்டதே 23 பேர்தான்.
இப் போட்டியின் முதல் பிரிவான டிரஸ்ஸேஜில் இவர் 61.00 பெனால்டி புள்ளிகளும்,கிராஸ்கன்ட்ரியில் 165.60 புள்ளிகளும் பெற்றார். ஜம்ப் பெனால்டியில் இவருக்கு 10புள்ளிகள் கிடைத்தது.
இதையடுத்து மொத்தம் 236.60 புள்ளிகள் எடுத்து கடைசி இடம் பிடித்தார்.
இப் போட்டியில் அமெரிக்க வீரர் மொத்தம் 34 பெனால்டி புள்ளிகளே எடுத்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, September 22, 2000, 5:30 [IST]