சிட்னியில் பெண்ணிடம் "குறும்பு" செய்த விளையாட்டு வீரர் யார்?
சிட்னி:
சிட்னியில் 17 வயது பெண்ணிடம் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக 23 வயது விளையாட்டு வீரரை சிட்னிபோலீஸார் தேடி வருகின்றனர்.
அந்த வீரருக்கு எதிராக கைது வாரண்டுடன் சிட்னி ஒலிம்பிக் கிராமம் முழுவதும் போலீஸார்விசாரித்து வருகின்றனர்.
சிட்னியில் 27-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒலிம்பிக்கில் 199நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக சிட்னியில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்,சிட்னியின் புறநகர்ப் பகுதியில் 17 வயதுப் பெண்ணிடம் ஒரு விளையாட்டு வீரர் செக்ஸ் "குறும்பு" செய்துள்ளார்.
ஆனால், அவர் யார், எந்த நாட்டு வீரர் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்தபுகாரின் பேரில் அந்த வீரருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வீரர் யார் என்பதைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டு அணியின்தலைவருக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
செக்ஸ் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விளையாட்டு வீரர் இன்னும் சிட்னி ஒலிம்பிக்கிராமத்தில்தான் இருக்கிறாரா இல்லை வெளியே சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.போலீஸார் தொடர்ந்து தேடுகின்றனர்.