டென்னிஸ்: முதல் சுற்றில் நிருபமா-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி தோல்வி
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி மோசமான தோல்வியைச்சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறியது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின்நிருபமா வைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஜெலீனா டோகிக்-ஸ்டப்ஸ்ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் 0-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி மோசமான தோல்வியைச் சந்தித்துபோட்டியிலிருந்து விலகியது.35 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுற்றது.
கடைசி நேரத்தில் இந்திய ஜோடி இந்திய ஒலிம்பிக் அணியில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் இப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே பதக்கக் கனவுஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில்தான்.
இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி தனது முதல் சுற்று ஆட்டத்தில் வென்றுஇரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி, உலகின் முதல் நிலை ஜோடியை எதிர்த்து விளையாட உள்ளதுகுறிப்பிடத்தக்கது.