For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதனை மங்கை மல்லேஸ்வரிக்கு ஆஸ்திரேலியாவில் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று சரித்திரமும், சாதனையும் படைத்த இந்தியாவின் கர்னம்மல்லேஸ்வரிக்கு ஆஸ்திரேலியாவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் இந்த பாராட்டு விழாவைநடத்தினர். இதில் மல்லேஸ்வரியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசுவழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்லேஸ்வரி என்பதும், தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற மூன்றாவது நபர் அவர் என்பதும் குறப்பிடத்தக்கது.

மல்லேஸ்வரிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா குறித்து ஆஸ்திரேலியா பத்திரிக்கைகள்எல்லாம் முழுமையான அளவில் செய்தி வெளியிட்டு தங்களது பாராட்டைத்தெரிவித்துக் கொண்டன.

பாராட்டு விழாவில் பேசிய மல்லேஸ்வரி, ஏதென்ஸில் நடைபெற உள அடுத்தஒலிம்பிக்கிலும் கலந்து கொண்டு சாதனை படைக்க விரும்புகிறேன் என்றுகுறிப்பிட்டார்.

ஆனால், அவரது கனவு நனவாகுமா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஒலிம்பிக்விளையாட்டிலிருந்து பளுதூக்கும் போட்டியை விலக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிஆலோசித்து வருகிறது என்பத குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், அதிகமான அளவில் பளுதூக்கும் வீரர்களும், வீராங்கனைகளும் போதைமருந்து பயன்படுத்துவதும், பரிசோதனையில் அவர்கள் பிடிபட்டு போட்டியிலிருந்துவிலக்கப்படுவதும் அதிகமாக உள்ளது.

மல்லேஸ்வரிக்கு ரூ. 1 லட்சம்:

சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தஇந்தியாவின் கர்னம் மல்லேஸ்வரியைப் பாராட்டி அவருக்கு விஜயவாடாவில் உள்ளகட்ரகட்டா வெங்கட்நாராயணா நினைவு அறக்கட்டளை ரூ. 1 லட்சம் பரிசுஅறிவித்துள்ளது.

சிட்னியிலிருந்து மல்லேஸ்வரி இந்தியா திரும்பியதும் ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடுசெய்து அவரிடம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறக்கட்டளைத் தலைவர்கட்ரகட்டா பாபு தெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X