இந்தியாவிற்கு நிதியுதவி அளிக்க ஜெர்மனி விருப்பம்
பெர்லின்:
2001 ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவி படிப்படியாக அளிக்கப்படும் என்று ஜெர்மனி அரசுஅறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி பொருளாதார ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹெட்மரியே விக்சோரக் சியேல் கூறியதாவது:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்அணுகுண்டு சோதனை நடத்தியதால் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம்.
2001 ம் ஆண்டு இந்தியாவுக்கு 100 மில்லியன் மார்க்குகளும், பாகிஸ்தானுக்கு 34 மில்லியன் மார்க்குகளும் அளிக்க தீர்மானித்துள்ளோம்.
அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு முன் ஆண்டுதோறும் ஜெர்மனியிடமிருந்து, இந்தியா 300 மில்லியன் மார்க்குகளும், பாகிஸ்தான் 100 மில்லியன்மார்க்குகளும் பெற்று வந்தன.
இந்த வருடம் ஜூலை மாதம் நடந்த மாநாட்டில், ஐரோப்பிய யூனியன், இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் இந்தியாவுக்கு நிதியுதவிஅளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஜெர்மனி அரசு இந்தியாவிற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.
மேலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனை நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. இது விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று ஜெர்மனி விரும்புகிறது.
இந்தியாவில் 100 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இதே போல் பாகிஸ்தானில் 45 மில்லியன் மக்கள்வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இந்தநேரத்தில் ஜெர்மனின் நிதியுதவியால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் மிகவும் மகிழச்சியடையும்என கூறினார் சியேல்
ஐ.ஏ.என்.எஸ்.