2004-ம் ஆண்டு ஒலிம்பிக்கை ஏதென்ஸிலிருந்து மாற்றும் திட்டமில்லை - ஒலிம்பிக் கமிட்டி
சிட்னி:
2004-ம் ஆண்டின் ஒலிம்பிக்கை கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து வேறு இடத்துக்குமாற்றும் திட்டமில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கமிட்டியின் இயக்குநர் ஜெனர் பிரான்கோயிஸ் கர்ராடு,நிருபர்களிடம் கூறியதாவது:
2004-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியிகள் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெறஉள்ளது. அங்கேயே ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சர்வதேசஒலிம்பிக் கமிட்டி விரும்புகிறது.
ஆகவே, ஏதென்ஸிலிருந்து வேறு இடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகளை மாற்றி நடத்தும்திட்டம் எதுவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இல்லை.
ஏதென்ஸில் போட்டிகளை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள தனி குழுநியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் தங்களது பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் என்றார் கர்ராடு.
ஏதென்ஸ் நகர நிர்வாகமும், ஏதென்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டியும் ஒலிம்பிக்போட்டிகளை நடத்துவது தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்ளவில்லைஎன்று வேறு இடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் மாற்றப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக்கமிட்டித் தலைவர் சாமரான்ச் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்சரிக்கையை அடுத்து ஏதென்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி தனது பணிகளைமுடுக்கிவிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த கமிட்டி அரசின் தலையீட்டின்பேரில்நீக்கப்பட்டு இப் புதிய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
2004-ம் ஆண்டு மே மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்குள்அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிடுவதாக புதிய கமிட்டி உத்தரவாதம்அளித்துள்ளது.
தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் மில்லேனியம் ஒலிம்பிக் போட்டிகளைக் காண130 பேர் கொண்ட குழு ஏதென்ஸிலிருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த நகரில்தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று முடிவானதற்குப்பிறகு வேறு நகரத்துக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதில்லை. 1908-ம் ஆண்டுரோமில் நடைபெற வேண்டிய போட்டிகள் லண்டனில் நடத்தப்பட்டன.
பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தன்னால் போட்டிகளை நடத்தமுடியாது என்றரோம் நகரம் தெரிவித்ததை அடுத்து லண்டனுக்கு அப் போட்டிகள் மாற்றப்பட்டன.மற்றபடி சர்வதே ஒலிம்பிக் கமிட்டியே நடவடிக்கை எடுத்து வேறு இடத்துக்குப்போட்டிகள் மாற்றப்பட்டதில்லை.
யு.என்.ஐ.