For Daily Alerts
Just In
பளுதூக்குதலில் சிட்னி ஒலிம்பிக்கில் ஈரானுக்கு முதல் தங்கப் பதக்கம்
சிட்னி:
பளுதூக்கும் போட்டியில் ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் ஈரான் நாட்டுவீரர் உசைன் தவகோலி தங்கப் பதக்கம் வென்றார்.
திங்கள்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் மொத்தம் 425 கிலோ எடைதூக்கினார்.ஸ்நாட்சில் 290 கிலோவும் கிளீன் அன்ட் ஜெர்க்கில் 235 கிலோவும் தூக்கினார்.
இதன் மூலம் சிட்னி ஒலிம்பிக்கில் தனது நாட்டுக்கு அவர் முதல் தங்கப் பதக்கத்தைப்பெற்றுத் தந்தார்.
பல்கேரிய வீரர் ஆலன் சாகேவ் 422 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும், கத்தார்நாட்டின்ஆஸாத் 420 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பாக பல்கேரிய வீரர் ஆலன் சாகேவுக்குத்தடை விதிக்கப்பட்டது. ஆனால், பல்கேரியா அபராதம் கட்டியதை அடுத்து ஆலன்சாகே மீண்டும் சேர்க்கப்பட்டார். அவர் இப்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, September 25, 2000, 5:30 [IST]