திரிசூல் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை
பாலசோர் (ஒரிசா):
ஒரிசா மாநிலம் சந்திப்பூரிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்தியாவின் அதிநவீன தொழில் திரிசூல் ஏவுகணைசெவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து ராணுவ செய்திக்குறிப்பு வெளியிட்ட அறிக்கை:
திரிசூல் ஏவுகணை இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. இது 50கிலோமீட்டர் தொலைவில் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானங்களைவீழ்த்துவதற்கு இது சரியான ஏவுகணையாகும்.
மைக்ரோவேவ் கதிர்களை எதிர்த்து இலக்கைத் தாக்கும் சக்திவாய்ந்தது. பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழகம்தயாரித்து வரும் ஐந்து ஏவுகணைகளில் திரிசூல் ஏவுகணையும் ஒன்று.
1983 ம் ஆண்டு முதல் திரிசூல் ஏவுகணைத் திட்டம் நடந்து வருகிறது. கடற்படை, ராணுவம், விமானப்படைஆகியவற்றிற்குப் பயன்படும் வகையில் திரிசூல் உள்ளது.தயாரிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.