For Daily Alerts
Just In
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு காஞ்சிப் பெரியவர் விருது
மும்பை:
பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்,விஞ்ஞானி ராம் நாராயணன் அகர்வால் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான காஞ்சிகாமகோடி சந்திரசேகரேந்திர சுவாமிகள் விருது வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிப் பெரியவர் என அன்புடன் அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சுவாமிகள்நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவில் சிறந்த சேவைபுரிந்தோருக்கு இவ் விருது தரப்படுகிறது.
ரூ. 2.5 லட்சம் பணம், வெள்ளி விளக்கு ஆகியவற்றைப் பரிசாகக் கொண்டது இந்தவிருது. மும்பையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் விருதுகள்வழங்கப்படும்.
Comments
Story first published: Wednesday, September 27, 2000, 5:30 [IST]