வடிவேலுவை த.மா.கா. கணக்கில் "வரவு வைத்த போலீஸ்
சென்னை:
சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய த.மா.கா.வினரில் 11 ஆயிரம் மட்டுமே சிறைக்குஅனுப்பப்பட்டனர். மற்றவர்களை மாலையே விடுதலை செய்தது அரசு.
15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டு சிறைசெல்வதற்காக த.மா.கா. சார்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் நடந்த இந்த மறியலில் ஒரு லட்சத்து 25ஆயிரம் த.மா.கா.வினர் கைது செய்யப்பட்டனர் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கட்சியின் முன்னணித் த லவர்கள் சிதம்பரம், எஸ்.ஆர்.பி, சோ.பாலகிருஷ்ணன், ஜெயந்தி நடராஜன்,தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
எப்படியும் ஒரு லட்சம் பேர் சிறை செல்வது என்ற திட்டத்தோடு த.மா.கா. போராட்ட களம்புகுந்தது. ஆனால், அந்த திட்டத்தை முறியடிக்கும் நோக்கத்தில் கைதானவர்களில் 11 ஆயிரம் பேரைமட்டும் ரிமான்ட் செய்து சிறையில் அடைத்தது தமிழக போலீஸ். மற்றவர்களை மாலையில் விடுதலைசெய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
அப்படி அனுப்பப்பட்டவர்களில் சிதம்பரம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டதலைவர்கள் அடங்குவர்.
இதற்கிடையில் தோழமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் போராட்டத்தை வாழ்த்திப் பேசவந்த தமிழக ஜனதா தளத் தலைவர் வடிவேலுவையும், தமிழக போலீசார் கைது செய்து விட்டனர்.
அவரையும் த.மா.கா. கணக்கில் வரவுவைத்து விட்டு, மாலையில் விடுவித்தனர்.