For Daily Alerts
Just In
காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் உள்பட 7 பேர் சாவு
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 4தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வியாழக்கிழமை இரவுமுழுவதும் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே, தெற்கு காஷ்மீர் பகுதியில்உள்ள புல்வாமா என்ற இடத்தில் கடும் மோதல் நடந்தது. இதில் நான்கு தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இவர்கள் தவிர பள்ளத்தாக்கு முழுவதும் நடந்த தாக்குதல்களில் மொத்தம் 7 பேர்கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, September 29, 2000, 5:30 [IST]