For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சியில் மாநாடு நடத்துகிறது புதிய தமிழகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய தமிழகம் கட்சியின் 2 வது மாநில மாநாடு அடுத்த மாதம் 1 மற்றும் 2 ம் தேதிகளில் திருச்சியில் நடக்கிறது.

இதுகுறித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:

புதிய தமிழகம் கட்சியின் 2 வது மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகே பிரமாண்டபந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுத் திடலுக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரும், முகப்புக்கு தளபதி சுந்தரலிங்கம் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலில்பெரியார், அம்பேத்கார், இமானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம், மேலளவு முருகேசன் மற்றும் பல தலைவர்கள் படம் வைக்கப்படும்.

மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள். வெளிமாநில பிரதிநிதிகளும் கலந்து மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றார்கிருஷ்ணசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X