தென்ஆப்ரிக்காவில் ஆயுதம் வாங்கப் போனாரா பெர்னாண்டஸ்?
டர்பன்:
இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்காக, தென்ஆப்பிரிக்கா வரவில்லை என்று டர்பனில் வியாழக்கிழமை பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தென்ஆப்பிரிக்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு இந்தியா திரும்பும் வழியில் டர்பனில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிகவும் இனிதாக முடிந்தது. இங்கு கல்வி, சமூக, கலாச்சார, அரசியல், மத அமைப்புத் தலைவர்களையும், இங்குவாழும் இந்தியர்களையும் சந்தித்துப் பேசினேன்.
தென்ஆப்பிரிக்காவில் அனைத்து வகையான ஆயுதங்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இதில் எதையும் வாங்குவதற்காக நான் தென்ஆப்பிரிக்காவரவில்லை.
இருப்பினும், இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் சேர்ந்து ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தென்ஆப்பிரிக்கபாதுகாப்பு அமைச்சர் மொசியோயா லெகோடா தலைமையில் கையெழுத்தானது.
இந்தியாவும் எதிர்காலத்தில் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும். இவை பிற நாடுகளுக்கு விற்பனை செய்யும் வகையில் இருக்கும். இந்தியாவில் மிகப்பெரியவிஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநகர்கள் இருக்கிறார்கள்.
பல துறைகளில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறையில் இரண்டுநாடுகளுக்கும் பயன்பெறும் வகையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.