For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டான்சி வழக்கில் அக். 9ல் தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக முன்னாள்முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது தொடரப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 9-ம்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் அறிவித்தார்.

தீர்ப்பு அறிவிக்கும் போது ஜெயலலிதா, சசிகலா உட்பட ஆறுபேரும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் டான்சிநிலத்தை குறைந்த விலைக்கு ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்ப்ரைசஸ்நிறுவனங்களுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி சென்னை 3-வது தனிநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகமது ஆசீப், முன்னாள் ஐ.ஏ.எஸ்அதிகாரி டி.ஆர்.சீனிவாசன், ஜெயலலிதாவின் இணைச் செயலாளர் கற்பூரசுந்தரபாண்டியன், முத்திரைத்தாள் துணை இயக்குனர் நாகராஜன் ஆகியோர் மீதுவழக்கு தொடரப்பட்டது.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் சாட்சி விசாரணைகள் முடிவடைந்தன. அரசு தரப்பில் 50பேர் சாட்சியம் அளித்தனர். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 8 பேர்சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள்.

இந்த மாதம் 4-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்றது. அரசு தரப்பில்மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் ஆஜர் ஆனார்.

ஜெயலலிதா, சசிகலா சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினோத் அரவிந்த் பாப்டே,சென்னையைச் சேர்ந்த ஜோதி ஆகியோர் வாதாடினார்கள். வெள்ளிக்கிழமை பிற்பகல்12 மணியுடன் விசாரணை முடிந்தது. இந்த வழக்கில் அடுத்தமாதம் 9-ம் தேதி தீர்ப்புவழங்கப்படும் என்று நீதிபதி அன்பழகன் அறிவித்தார்.

வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி, ஜெயலலிதா, சசிகலா உட்பட குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X