For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரிகா திடீர் வெளிநாடு பயணம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா சனிக்கிழமை திடீரென வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சந்திரிகாவெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளது கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கொலை மிரட்டல் இருப்பதால் சந்திரிகாவின்செயல்பாடுகள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. சந்திரிகாவின்குழந்தைகள லண்டனில் வசிப்பதால் அவர்களைப் பார்க்க அங்கு சென்றிருக்கலாம்என்று தெரிகிறது.

சனிக்கிழமை வெளிநாடு கிளம்பும் முன் அவர் விடுத்த ஒரு செய்திக்குறிப்பில்,அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும்.

எனது அமைச்சர்கள் யாராவது தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது அரசு ஆறு தேர்தல்களை நடத்தியுள்ளது. அனைத்துத் தேர்தல்களும்நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளன என்றார் அவர்.

இதற்கிடையே, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்கொல்லப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியைச் சேர்ந்த 4000 பேர் கொழும்புவில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்த ஸ்ரீதேவா என்ற அந்தத் தொண்டர்போலீஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X