For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நாகப்பா தப்பியது ராஜ்குமாருக்குத் தெரியாது

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

வீரப்பன் பிடியிலிருந்து நாகப்பா தப்பித்து வந்தது குறித்து என் தந்தைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார்தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சந்தனக்கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து 60 நாட்கள் கழித்து தப்பித்து வந்தார் நாகப்பா. பெங்களூர் வந்த அவர் முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.பின்னர் அவர் சதாசிவநகரிலுள்ள நடிகர் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு பர்வதம்மாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் பர்வதம்மாவிடம் நடிகர் ராஜ்குமார் உள்பட பிற இரண்டு பேரின் நலம் குறித்து தெரிவித்தார்.அப்போது ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் அனைவரும் சந்தித்துப் பேசினர். அதற்குப்பின் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் அளித்த பேட்டியில், நாகப்பா தப்பிவந்திருக்கிறார். அவர் அப்பா, கோவிந்தராஜ், நாகேஷ் அனைவரும் நலமுடன் இருப்பதாகக் கூறினார்கள். அரசுத் தூதர் கோபாலிடமிருந்து இதுவரைதகவல்கள் எதுவும் வரவில்லை.

நாகப்பா தப்பி வந்ததால் என் தந்தைக்கும், பிறருக்கும் தொந்தரவு எதுவும் இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் வீரப்பன் என் அப்பாவைபெரியவர் என்று மிகவும் மரியாதையுடன் அழைக்கிறார்.

நாகப்பா அவராகவே தப்பி வந்து விட்டார். இவர் தப்பித்து வந்தது என் தந்தை உள்பட யாருக்குமே தெரியாது. நாகப்பாவுக்கு ஒரு குடும்பம் உள்ளது.அதனால் அவர் தப்பித்து வந்திருக்கலாம். இப்போதுதான் அவர் தப்பித்து வந்துள்ளார். அவரிடம் அவர் தப்பித்து வந்தாரா? வீரப்பன் விடுவித்தாரா என்றுதுருவி, துருவி கேட்க முடியாது. நிதானமாகத்தான் கேட்க முடியும் என்றார் சிவராஜ்குமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X