7 தமிழக கன்னியாஸ்திரிகளுக்கு "புனிதர் பட்டம்
டெல்லி:
தமிழகத்தைச் சேர்ந்த 7 கன்னியாஸ்திரிகளுக்கு போப் இரண்டாம் ஜான் பால் புனிதர் பட்டத்தை வழங்குகிறார். இதற்கான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமைஅக்டோபர் 1 ம் தேதி வெளியிடப்படும்.
1877 ம் ஆண்டு இந்தியாவில் நிறுவப்பட்டது பிரான்ஸ்கான் மிஷினரி ஆஃப் சாரிட்டி. தமிழகத்தில் எப்.எம்.எம்.அமைப்பு ஊட்டியில் உள்ளது. இதிலுள்ள 7கன்னியாஸ்திரிகளுக்கு புனிதர் பட்டம் வழங்க போப் 2 ம் ஜான்பால் முடிவு செய்துள்ளார்.
1900 ம் ஆண்டு சீனாவில் உள்ள தையூன் ஃப்யூ என்ற இடத்தில் சிறிய கிறிஸ்தவ குழு செயல்பட்டு வந்தனர். அப்போது சீனாவிலுள்ள பாக்சர் என்றதீவிரவாத அமைப்பினர் தங்கள் நாட்டில் யாரும் வசிக்கக் கூடாது என்று கூறி போராட்டம் நடத்தினர்.
அப்போது நடந்த கலவரத்தில் 7 கன்னியாஸ்திரிகளும் கொல்லப்பட்டனர். இவர்கள் உள்பட 120 கன்னியாஸ்திரிகளுக்கு புனிதர் பட்டம் அக்டோபர் 1 ம்தேதி வழங்கப்படுகிறது.
பிஷப்புக்கள், மதபோதகர்கள் மற்றும் கிறிஸ்தவ மதத்தில் சிறப்பாக தொண்டு புரிபவர்கள் இதில் அடங்குவர். மறைந்த அன்னை தெரசாவிற்குவழங்காமல் 100 ஆண்டுகளுக்கு முன் மறைந்த இந்த கன்னியாஸ்திரிகளின் பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.