For Daily Alerts
Just In
திருச்சியில் 300 திருட்டு வீ.சி.டி.க்கள் பறிமுதல்
திருச்சி:
திருச்சி மாவட்டம் உரையூர் பகுதியில் தமிழ் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களின் 300 திருட்டு வீடியோ கேஸட்டுக்களைப் போலீஸார் வெள்ளிக்கிழமைகைப்பற்றினர்.
இதுதொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் லோகராஜ். இதுதவிர போலீஸார் ரூ 2 லட்சம் பெறுமானமுள்ள கம்ப்யூட்டர், வீடியோகேஸட்டுக்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.
சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட சிறப்பு போலீஸ் படையினர் லோகராஜனின் வீட்டில் இந்த திடீர் சோதனையில் திருட்டு வீடியோ கேஸட்டுக்களைக்கண்டுபிடித்தனர்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, September 30, 2000, 5:30 [IST]