கோவில் பிரசாதம் சாப்பிட்ட 325 பேர் மயக்கம்
டெல்லி:
டெல்லியில் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 325 பேருக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களில் பெண்கள்,குழந்தைகள், கோவில் ஊழியர்களும் அடங்குவர். அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து டெல்லி துணை போலீஸ் கமிஷனர் நித்யானந்தம் கூறுகையில், கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த விஹார் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில்கடந்த சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
இந்த பூஜையில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 325 பேருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. அவர்கள்அனைவரும் டெல்லியிலுள்ள 6 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெறுத் திரும்பி விட்டனர்.
கோவில் திருவிழாவில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தின் மாதிரியை பரிசோதனைக்காகக் கொடுத்திருக்கிறோம். பரிசோதனை அறிக்கை வந்ததும்உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பது தெரிந்து விடும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.