புதுவையில் கண்ணன் கட்சியுடன் பா.ம.க கூட்டணி?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் முன்னாள் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ப.கண்ணன்துவக்கியுள்ள புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிஅமைக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமைராமதாஸ் அளித்த பேட்டி:
பாண்டிச்சேரியில் என்னைக் கொலை செய்யப் பார்த்தது தொடர்பாக முதல்வர்சண்முகம் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார்.
புதுவையில் கண்ணன் கட்சியுன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரைஅவர் வந்து எங்களைப் பார்க்கவில்லை. வாய்ப்பு வரும்போது கூட்டணி குறித்துப்பேசுவோம்.
கண்ணன் புதுக் கட்சி துவங்கியுள்ளது நல்லதே. இதை நான் ஆதரிக்கிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழகமுதல்வர் கருணாநிதியைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். இதுவரை அது கண்டுகொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றார் ராமதாஸ்.