For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்ஸில் துர்கா பூஜை கோலாகலம்

By Staff
Google Oneindia Tamil News

பாரிஸ்:

நவராத்திரியை முன்னிட்டு இந்தியாவில் 10 நாட்கள் துர்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் வெளிநாட்டில் இந்த பூஜை மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இது நடந்தது பிரான்ஸில்.

தலைநகர் பாரிசின் தெற்கு பகுதியில் உள்ள மெய்சன் டெல் இந்தி என்ற பகுதியில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. மெய்சன் டெல் இந்தி பகுதியில்வாழ்பவர்கள் அனைவரும் இந்தியாவிலுள்ள வங்க மொழி பேசும் மக்கள். அங்கு வாழும் இந்திய மக்கள், அதாவது வங்காளிகள் இந்த துர்காபூஜைக்கு ஏற்பாடு செய்து, 10 நாட்களும் மிகச் சிறப்பாக பூஜை செய்கின்றனர்.

பாரிசில் மிகக் குறைவான இந்திய மக்களே வாழ்கின்றனர். இருப்பினும் அவர்கள் கடந்த 14 வருடங்களாக இந்த துர்கா பூஜையைக் கொண்டாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துர்கா பூஜைக்காக அவர்கள் 10 நாட்களும் துர்கை அம்மன் உள்பட பல கடவுள்களின் உருவ சிலைகளுடன் கொலு வைத்து, மாலையில் சிறப்புவழிபாடு நடத்துகிறார்கள். துர்கா பூஜையின்போது ஒவ்வொரு நாளும் மாலையில் பிரபல வங்காள கலைஞர்களின் இசை, நாட்டியம், நாடகம் ஆகியவைஇடம்பெறுகிறது.

இந்த வருடமும் வழக்கம் போல் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திர நாத் தாகூரின் கவிதைகளுடனும், ஜெயஸ்ரீமஜூம்தாரின் பக்திப்பாடல்களுடன் 10 நாட்களும் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து உதய் தேஷ்பாண்டேயின் தபேலாவாசிக்கப்பட்டது.

இந்த வருடம் பாரிசில் வாழும் தொழிலதிபர்கள், ஏர்இந்தியா, வங்கதேச பிமான் அமைப்பு மற்றும் மத்திய அரசின் சுற்றுலாப் பிரிவினரும் இந்தவிழாவிற்கு நிதியுதவி செய்திருந்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X