6 மில்லியன் பாரல் கச்சா எண்ணெய்யை விற்கிறது ஜப்பான்:இந்தியாவில் பெட்ரோலியம் விலை குறையுமா?
டோக்கியோ:
சர்வதேச சந்தையில் சுமார் 6 மில்லியன் பாரல் கச்சா எண்ணெய்யை விற்க ஜப்பான் முடிவெடுத்துள்ளதையடுத்துபெட்ரோலிய எண்ணெய்யின் விலை பெருமளவு குறைந்தது.
கடந்த 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு பெரும் அளவில் எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
முன்னதாக தனது ரிசர்வ் தொகுப்பிலிருந்து 30 மில்லியன் பாரல் எண்ணெய்யை அமெரிக்க அரசு விற்பனைக்குஎடுத்துவிட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை பாரல் ஒன்றுக்கு 30 டாலராகக் குறைந்தது.
சர்வதேச அளவில் எண்ணெய் விலை அதிகரித்து வந்ததை அடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும்படி கச்சாஎண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால், உற்பத்தியை அதிகரிக்க இந்த நாடுகள் மறுத்துவிட்டன. இதையடுத்து இந்தியாவில் பெட்ரோலியப்பொருள்களின் விலையை அரசு உயர்த்தியது.
மேலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வதைத் தடுக்க அமெரிக்காவும் ஜப்பானும் சில முயற்சிகள்எடுத்தன. அமெரிக்கா தனது ரிசர்வ் தொகுப்பிலிருந்து கச்சா எண்ணெய்யை விற்றது. ஜப்பான் இப்போது சர்வதேசசந்தையில் எண்ணெய்யை விற்று விலைக் குறைக்க முயன்றுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் பெட்ரோலிய விலை குறையுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.