தாய்லாந்தில் சோட்டா ராஜனை சுட்ட நபர் இந்தியாவில் கைது
லக்னோ: தாய்லாந்தில் சோட்டா ராஜனை சுடட கும்பலைச் சேர்ந்த நூர் பக்ஷ் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பெங்களூரைச் சேர்ந்த ஒருவரின் பெயரால் மேசடியாக இவர் இந்தியபாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.
இவர் பாகிஸாதானின் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்.
பாங்காக்கில் மேலும் 3 பேரோடு சேர்ந்து சோட்டா ராஜனை சுட்ட பின்னர் இவர் அங்கிருந்து தப்பி துபாய் சென்றார். அங்கிருந்து கராச்சி சென்று பின்னர்நேபாளம் வழியாக இந்தியா திரும்பினார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நின்றிருந்த இந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சோட்டா ராஜனை சுட்ட வழக்கில் இவர் தாய்லாந்தில் தேடப்பட்டு வருகிறார். விரைவில் இவர் சி.பி.ஐ. மூலம் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்படுவார்.
தொடர்பான செய்திகள்:
தாதா சோட்டா ராஜனை கைது செய்தது தாய்லாந்து
செயற்கைக் கோளுடன் செயல்படும் சோட்டா ராஜன்