ஜெ. படத்தை எரித்தவருக்கு அதிமுக வில் பதவி
வேலூர்:
அதிமுக கட்சியிலிருந்து இரு முறை நீக்கப்பட்டு மீண்டும் சேர்ந்தவருக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினராக பதவி கிடைத்துள்ளது.
1996 ல் அதிமுக வில் இருந்து திருநாவுக்கரசு நீக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் அவரின் வீட்டுக்கு எதிரே ஜெயலலிதாவின் உருவப் பொம்மைமற்றும் உருவப்படம் எரிக்கப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்டது தொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ஜி.சம்பத் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டார்.
அதற்குப்பின் 1997 ம் வருடம் ஜெயலலிதா முன்னிலையில் சம்பத் உள்ளிட்டோர் அதிமுக வில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உள்ளாட்சி இடைத்தேர்தலில் குடியாத்தம் நகரில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக ஆதரவு பெற்றஅதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து சம்பத்தின் தம்பி போட்டியிட்டார். அப்போது தம்பிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக இவர் மேல் புகார்கூறப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் முடிந்தபிறகு இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். இப்போது, ஜெயலலிதா அறிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர் பட்டியலில் இவரது பெயரும்உள்ளது.