For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.சி.சி.நாக் அவுட் கிரிக்கெட்: அரையிறுதியில் பாகிஸ்தான்

By Staff
Google Oneindia Tamil News

நைரோபி:

ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரில் அரையிறுதியில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெற்றது.

கென்யா தலைநகர் நைரோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைவென்றது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயசூர்யா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயசூர்யாவும், குணவர்த்தனேவும்களமிறங்கினர்.

தொடக்கமே அந்த அணிக்கு பெரும் அடியாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தகுதிச் சுற்று ஆட்டத்தில் சதமடித்த குணவர்த்தனே 5ரன்னில் அவுட்டானார்.

அடுத்த வந்த அட்டபட்டுவும் ரன் எடுக்காமல் அஜ்ட்டானார். எதிர் முனையில் ஆடிக் கொண்டிருந்த ஜெயசூர்யா அதிரடி ஆட்டம் ஆடினார். அதனால்,அணிக்கு ரன்கள் வந்தது.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருக்க எதிர் முறையில் ஜெயசூர்யா ரன்கள் குவித்தார். இருப்பினும் 39 ரன்களில் அவரும் அவுட்டனார். அவரதுஸ்கோரில் 3 சிக்சர்கள் அடங்கும்.

அடுத்து வந்தவர்களில் அர்னால்டு மட்டும் ஓரளவு நின்று ஆடி 38 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில்45.4 ஓவரில் 194 ரன்களில் இலங்கை ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணியில் வாஸிம் அக்ரம், அசார் மெஹ்மூத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், சக்லைன் முஷ்டாக் இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் வெற்றி இலக்கை எஹிதாக எட்டி வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய இம்ரான் நசீர், சயீத் அன்வர் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி ரன்கள் குவித்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர்.

40 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் நசீர் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யூசுப் யுகானாவும், சயீத் அன்வரும் கடைசி வரைஅவுட்டாகாமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.

சயீத் அன்வர் 105 ரன்கள் எடுத்தார். யுகானா 42 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அடுத்து 11-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில்நியுசிலாந்துக்கும், ஜிம்பாப்வேக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்த்து விளையாடும்.

மற்றொரு அரையிறுதியில் விளையாட இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் கடைசி கால் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் இந்தியா 13-ம் தேதி மோதுகிறது. இறுதி ஆட்டம் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X