For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்பத்தோடு ஓசி பஸ் பயணம் செய்யும் போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் அரசு பஸ்களில் ஓசிப் பயணம் செய்யக் கூடாது. அப்படி செய்து மாட்டிக் கொண்டால்அவர்களை காவல் துறை காப்பாற்றாது என்று சென்னை நகர போலீசாருக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து அனுப்பியுள்ள எச்சரிக்கை வருமாறு:

அரசு பஸ்களில் தங்களது குடும்பத்தினருடன் போலீசார் ஓசியில் பயணம் செயவது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன.அவ்வாறு அவர்கள் பயணம் செய்யக் கூடாது. அது தவறானது.

பஸ் பயணம் செய்யும் போலீசார், கண்டக்டர்கள் கேட்கும்போது தங்களது அடையாள அட்டைகளை காட்டுவதில்லை.

அதுவும் தவறான செயல் தான். போலீசாரைத் தவிர அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அரசு பஸ்களில் ஓசிப் பயணம்செய்ய அனுமதியில்லை. போலீசார் தங்களது குடும்பத்தினருடன் பஸ்களில் ஓசியில் பயணம் செய்யக் கூடாது. டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்ய வேண்டும்.

போலீசார் தங்களுடன் வருபவர்களுக்கும் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் மாட்டிக் கொண்டால்,அவர்களை காப்பாற்ற காவல்துறை முன் வராது. பணி நிமித்தமாக பஸ் பயணம் செய்யும்போது போலீசார் கண்டிப்பாக சீருடைஅணிந்திருக்க வேண்டும்.

சீருடை இல்லாமல் பஸ்சில் செல்லும் போலீசார், கண்டிப்பாக தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றுஅவர் எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X