For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்சிக்குப் பின்.. 1 ஆண்டு முடிந்தும் குழப்பத்தில் பாகிஸ்தான்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்த ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் நாட்டின் நிலையைப் புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார் ராணுவத் தளபதி முஷாரப். அதிகாரத்தைக்கைப்பற்றியவுடன், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை சிறையில் அடைத்தார். அவர் மீது கொலை சதி உள்பட பல வழக்குகளைப் போட்டார். இன்னும்சிறையிலேயே இருக்கிறார் நவாஸ்.

முஷாரப் ஆட்சி குறித்து நாடு முழுவதும் அதிருப்தி அதிகரித்துள்ளது. முஷாரப் ஆட்சி குறித்து அவாமி தேசியக் கட்சித் தலைவர் அஸ்பான்யார் வாலி கான் கருத்துத்தெரிவிக்கையில், பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சியே வர வேண்டும். ராணுவ ஆட்சியை யாரும் விரும்பவில்லை என்றார்.

பாகிஸ்தானில் நடக்கும் ராணுவ ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும். அங்கு ஜனநாயக ஆட்சி மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவிரும்புவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் இரண்டு பெரிய முக்கியத் தலைவர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் பெனாசிர் பூட்டோ. இவர்களில் நவாஸ் சிறையில் இருக்கிறார். பூட்டோ,லண்டனில் இருக்கிறார். இருவர் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனால் அவர்கள் மீண்டும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுபிரதமர் ஆவார்களா என்பது கேள்விக்குரிய விஷயம்.

நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியை உடைக்க முஷாரப் முயற்சித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. இருப்பினும் சில பொறுப்புகளை முக்கியத்தலைவர்களுக்கு வழங்கினால், கட்சியை உடைப்பது சுலபம் என முஷாரப் நினைக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், வேறு வழியில்லாத முஷாரப், கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதியான இம்ரான் கான் அல்லது மத தீவிரவாத கட்சிகளானஜமாத் இ இஸ்லாமி அல்லது ஜமாத் உல்மா இ இஸ்லாம் ஆகியவற்றையே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் முஷராப்புக்கு முதலில் இருந்த ஆதரவு இப்போது இல்லை. அவரால் நாட்டின் முக்கியப் பிரச்சனைகளில் சுயமாக முடிவு எடுக்க முடியுமாஎன்பது சந்தேகமே. குறிப்பாக ஐ.எஸ்.ஐ. நடவடிக்கைகளைத் தடை செய்வது, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்ற முக்கியமுடிவுகளில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அவரால் எதுவும் செய்ய இயலாத நிலை உள்ளது.

விலைவாசி உயர்வு, பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன் சுமை போன்றவை பொதுமக்களிடையே முஷாரப் ஆட்சிகுறித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X