For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோட்டா ராஜனை ஒப்படைக்கக் கோருகிறது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தாதா சோட்டா ராஜனை ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சோட்டாராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இதில் எந்தவிதமான தாமதமும் இல்லை. அது குறித்தஆவணங்களை மகாராஷ்டிரா மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.அதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசுக்குஇடையே நல்லுறவு நிலவி வருகிறது. பத்திரிக்கைகளில் வந்தது போல்இவைகளுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை .

அனைைவரும் சோட்டா ராஜனைத் தாய்லாந்திலிருந்து அழைத்து வருவதிலும்,அவனைக் கொல்ல முயன்றவர்களை கண்டுபிடிப்பதிலும் மிக முனைப்புடன்செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் 5-ம் தேதி மும்பை போலீசார் பாங்காக் சென்று சோட்டா ராஜனைவிசாரித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சோட்டா ராஜனின் பாஸ்போர்ட் போலியானது என்று தெரிய வந்தால்,எந்த விதமான நடவடிக்ககைள் மேற்கொள்ளப்படும் என்பது பற்றி தெரியவில்லை.

சோட்டா ராஜன் மலேசியாவிலிருந்து தாய்லாந்து சென்றிருப்பதால், பாஸ்போர்ட்போலியானது என தெரியவந்தால் அவர் மலேசியாவிற்குத்தான் திரும்பஅனுப்பப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சோட்டா ராஜனின் இந்திய பாஸ்போர்ட் போலியானது எனதெரியவந்துள்ளது. அவருக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்1996-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதில்தனது பெயர் விஜய் ராமகிருஷ்ண கடம் என்றும், மன்னார்புரியில் வசிப்பதாகவும் கூறிபாஸ்போர்ட் பெற்றுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X