For Daily Alerts
Just In
மீண்டும் பெட்ரோல் தயாரிப்பேன் .."மூலிகை ராமர்
சென்னை:
மீண்டும் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பேன் என்று ராமர் பிள்ளை கூறியுள்ளார்.
மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பில் மோசடி செய்ததாக ராமர் பிள்ளை மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இவ்வழக்கில் ராமர் பிள்ளை தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை ராமர் பிள்ளைவந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நீதிமன்றத்தில் ஆஜராகும்படி எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை. செவ்வாய்க்கிழமை எனக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்படுவதாகப்பத்திரிக்கைகளில் செய்தி படித்தேன். உடனடியாக நீதிமன்றத்துக்கு வந்தேன்.
நான் புறநானூறு படித்தவன். புறமுதுகிட்டு ஓட மாட்டேன். எனக்கு நல்ல தீர்ப்பு கிடைத்ததும் மீண்டும் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பேன் என்றார்ராமர்பிள்ளை.
Comments
Story first published: Wednesday, October 11, 2000, 5:30 [IST]