காஷ்மீரில் கடத்தப்பட்ட 3 போலீஸார் பிணமாக மீட்பு
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 3 ரிசர்வ்போலீஸ்காரர்களின் உடல்கள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஜம்மு போலீஸ் ஐ.ஜி. ஆர்.வி.ராஜூ கூறியதாவது:
சூரன்கோட் பகுதியில் வசித்து வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் வீட்டில் தலைமைக் காவலர் அப்துல்மஜித், கான்ஸ்டபிள்கள் குலாம் முகமது, அப்துல் ரஷித் ஆகியோர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அப்போதுஅடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று அவர்கள் மூன்று பேரையும் கடத்திக் கொண்டு சென்றது.
ஆனால் அவர்கள் யாரால் எப்படிக் கடத்தப்பட்டனர் என்று தெரியாமல் இருந்தது. இதற்கிடையே வியாழக்கிழமைபூஞ்ச் மாவட்டம் சராரி காட்டில் இவர்களது சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களது உடல்களை எடுத்துவருவதற்காக தனிப்போலீஸ் படையினர் பூஞ்ச் மாவட்டம் சென்றுள்ளனர் என்றார் ராஜூ.
இதற்கிடையே சூரன்கோட்டே பகுதியில் புதன்கிழமை இரவு இரண்டு பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் ரபிபாத் பகுதியில் உள்ள முசாபர் அகமது கான் என்பவரின் வீட்டில் அடையாளம்தெரியாத, துப்பாக்கிய ஏந்தியவர்கள் புகுந்து சராமரியாகச் சுட்டதில் முசாபர், அவரது மனைவி மற்றும் மகன்ஆகியோர் இறந்தனர்.
ஸ்ரீநகர்- பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.இதில் அதில் பயணம் செய்த இரண்டு பாதுகாவலர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை காலைநடந்தது.
யு.என்.ஐ