குரோனியேவுக்கு ஆயுள் கால தடை
ஜோஹன்னஸ்பர்க்:
மேட்ச் பிக்ஸிங் புகார் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே வாழ்நாள் முழுவதும்கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றதை குரோனியே ஒப்புக் கொண்டதால்அவரை வாழ் நாள் முழுவதும் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியொன்றில் மோசமாக விளையாடுவதற்காக இந்தியசூதாட்டக்காரர்களிடம் பணம் வாங்கியதாக குரோனியே மீது புகார் கூறப்பட்டது.இதற்கான ஆதாரமாக ஆடியோ டேப் ஒன்றையும் டெல்லி போலீஸார்வெளியிட்டனர்.
இதையடுத்து குரோனியே மீதான புகாரை விசாரிக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்வாரியம் கமிஷனை நியமித்தது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஏழு நாட்களுக்குள் தனது கருத்தைக் கூறகுரோனியேவுக்கு வாரியம் கெடு விதித்துள்ளது.